Saturday, July 4, 2009

மலைப்பாம்பைப்

மலைப்பாம்பைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் திகைப்பாய் இருக்கிறது. ஒரு பெரிய இரையை விழுங்கிவிட்டுச் சலனமில்லாமல், தவிப்புகள் இல்லாமல், மாதக் கணக்கில் கரையான் ஏறுவது தெரியாமல் செரிக்கும்வரை மரம் சுற்றிக் கிடக்கிறது. எப்பேர்ப்பட்ட கம்பீரம் அது! மனிதனை போன்ற அற்பப் பிராணிக்கோ ஒரு சிறிய இரையை - அனுபவத்தை விழுங்கிச் செரிக்க என்னென்னவோ தேவைப்படுகிறது சாராயம் முதல் கவிதைவரை. விழுங்கி மௌனமாய் செரித்தி மோனங்க்க்கொள்ளும் வலிமை சாத்தியப்படும் போது , கவிதையைவிட நுட்பமாய் சாரயத்தைவிட போதையாய் ஒன்று நிகழலாம்.

No comments: